Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கக் கடலில் காற்றழுத்தம்? தமிழகம் & கேரளத்தில் மழை நீடிக்கும்!

வங்கக் கடலில் காற்றழுத்தம்? தமிழகம் & கேரளத்தில் மழை நீடிக்கும்!
, சனி, 6 ஆகஸ்ட் 2022 (08:44 IST)
கேரளா  தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பலத்த மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.

 
ஏற்கனவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அதன் பின்னர் அந்த தாழ்வு பகுதி தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆம், கேரளா  தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பலத்த மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது.

மன்னார்  வளைகுடா பகுதி, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதி, வடக்கு கர்நாடக கடலோரப் பகுதிகளில், மணிக்கு 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னையை பொருத்தவரை பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என   குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பலி எண்ணிக்கை 64.33 லட்சத்தை தாண்டியது!