Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்கு பயந்து கொல்ல பாக்குறாங்க! – அமமுக மீது கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (11:16 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அமமுகவினர் தன்னை கொல்ல முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பில் கோவில்பட்டி பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிருகிறார். இந்நிலையில் அதே கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூவுக்கு எதிராக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக – அமமுக இடையே கோவில்பட்டியில் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் கோவில்பட்டியில் அமமுகவினர் தோல்வி கண்டுவிடுவோம் என அஞ்சுவதாகவும், அதனால் தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments