Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-பாஸ் வாங்காமல் போனார் உதயநிதி! – அமைச்சர் ஜெயக்குமார்!

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (14:11 IST)
தூத்துக்குடியில் போலீஸ் விசாரணையில் மரணமடைந்த குடும்பத்தினரை பார்க்க செல்ல உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் அனுமதி பெறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்திய பென்னிக்ஸ் ராஜ் மற்றும் அவரது தந்தை ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் தாக்கியதாலேயே அவர்கள் மரணித்ததாக பலர் போராட்டம் நடத்திய நிலையில் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேற்று நேரில் சென்று சந்தித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல உதயநிதி அனுமதி பெற்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “உதயநிதி இ-பாஸ் அனுமதி பெறாமல் தூத்துக்குடி சென்றுள்ளார். இது சமுதாய பிரச்சினை என்பதால் உதயநிதி முறையாக அனுமதி பெற்று செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments