Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் இருந்து வந்த 70 பேருக்கு கொரோனா; 28 பேருக்கு ஒமிக்ரானா? – அமைச்சர் விளக்கம்!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (11:56 IST)
தமிழகத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதியான நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் விமான நிலையங்களில் பலத்த கட்டுப்பாடுகள், சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நைஜீரியாவிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள் குறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் ”வெளிநாடுகளில் இருந்து வந்த 70 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 28 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறியான எஸ் ஜீன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments