Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்கழி பௌர்ணமி; திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை!

மார்கழி பௌர்ணமி; திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை!
, வெள்ளி, 17 டிசம்பர் 2021 (10:56 IST)
திருவண்ணாமலையில் நாளை பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சபூத தலங்களில் அக்கினி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலம் நடத்தப்படுவதும், அதில் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் கலந்து கொள்வதும் வழக்கம்.

ஆனால் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாக திருவண்ணாமலையில் கிரிவலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பல்வேறு கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், கிரிவலத்தில் மக்கள் பங்கேற்க தடை தொடர்ந்து வருகிறது. நாளை பௌர்ணமி அன்று கிரிவலம் நடைபெறும் என்றாலும் அதில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம்!