Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணிடம் பேசியபடி நைசாக நகையை திருடிய ஆண்கள் ! வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (20:54 IST)
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள சின்னய்யா தெருவில் ஆர் கே பி என்ற பிரசித்தி பெற்ற ஒரு நகைக்கடை இயங்கி வருகிறது.இங்கு கடந்த 10 ஆம் தேதி இரு ஆண் வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதற்க்காக வந்துள்ளனர்.
அப்போது கடையில் வேலை செய்யும் பெண், இருவருக்குன் நகைகளின்  டிசைன்கள காண்பித்துள்ளார். இடையிடையே பணிபெண்ணிடம் பேச்சுக் கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பிவிட்டு,சட்டென மேஜையில் இருந்த 5 சவரன் மதிப்புள்ள 4 தங்க டாலர்களை  திருடிக்கொண்டனர்.
 
அந்தப் பணிப்பெண் மீண்டும் அவர்களிடம் வந்த போது, பின்னர் வருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டனர்.
 
அப்போது பணிப்பெண் நகைகளை எல்லாம் எண்ணிப்பார்க்கிற போது, நகைகள் குறைந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே முதலாளிக்கு தகவல் தெரிவித்து, போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டது.
 
இந்தப் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் , கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்து  , அதில் உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

கர்வ்ட் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO F27 Pro Plus 5G!

மன்னார்குடியில் பட்டாசு விபத்து: உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணம்.. முதல்வர் உத்தரவு

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments