Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகள் உள்பட முக்கிய பகுதிகளில் மாஸ்க் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (11:01 IST)
தமிழகத்தில் திரையரங்குகள் உட்பட ஒரு சில முக்கிய பகுதிகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று கூட தமிழகத்தில் கிட்டத்தட்ட 200 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கையை எடுத்து வரும் தமிழக அரசு தற்போது திரையரங்குகள் உள்பட ஒரு சில முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திரையரங்குகள், கலை அரங்குகள் ஏசி அரங்குகள் மருத்துவமனைகள் ஆகியவற்றில் இருப்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments