கோவையில் மாஸ்க் கட்டாயம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (08:04 IST)
கோவை மாவட்டத்தில் புளூ காச்சல் பரவி வருவதை அடுத்து பொதுவெளியில் செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் காய்ச்சல், உடல்வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகிய பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இது வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 
 
எனவே காய்ச்சல் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் புளூ காச்சல் பரவி வருவதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.  
 
காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments