கார்த்திகை மாத பவுர்ணமி: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (07:59 IST)
கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் ஐந்து நாட்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
ஒவ்வொரு மாதமும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி வருகிறது. அந்த வகையில் சதுரகிரி கோவிலில் பிரதோஷம், கார்த்திகை, பௌர்ணமி வழிபாட்டிற்காக நவம்பர் 24 முதல் 28 வரை 5 நாட்கள் செல்வதற்கு வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். 
 
மலைப்பாதையில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆற்றுப்பகுதிகளை இறங்கி குளிக்க கூடாது என்றும்  இரவு நேரத்தில் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும்  கூறப்பட்டுள்ளது. 
 
மேலும் அனுமதிக்கப்பட்ட நாளில் கனமழை பெய்தால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் என்றும் வனத்துறை என தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments