Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

Mahendran
திங்கள், 17 ஜூன் 2024 (12:33 IST)
சமீபத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் அடித்து நொறுத்தப்பட்ட நிலையில் சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்த செய்வோம் என அக்கட்சியின் கே கோபாலகிருஷ்ணன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இன்று அளித்த பேட்டியில் ’சாதி மறுப்பு திருமணங்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம், நாங்கள் யாரையும் கடத்திக் கொண்டு சென்று திருமணம் செய்து வைக்கவில்லை, எங்களை நாடி வந்தவர்களுக்கு பாதுகாப்பு அளித்து எங்கள் கடமையை செய்கிறோம்’ என்று தெரிவித்தார்.
 
மேலும் என்றைக்கும் இந்த கடமையை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்றும், சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு உற்ற பாதுகாப்பு கேடயமாக மார்க்கெட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இந்த பேட்டிக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது. யாரோ பெற்ற பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க நீங்கள் யார் என்றும் சாதி மறுப்பு திருமணத்தை செய்து வைக்க நீங்கள் விரும்பினால் இருதரப்பு பெற்றோரிடமும் பேசி அவர்களுடைய சம்மதத்துடன் திருமணம் செய்து வையுங்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments