Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

Siva

, ஞாயிறு, 16 ஜூன் 2024 (13:48 IST)
முதியோர் இல்லத்தில் முதியவர்களை பராமரிக்கும் பணியில் இருந்த 23 வயது இளம் பெண் 80 வயது முதியவரை காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவில் உள்ள முதியோர் இல்லத்தை கவனித்து வரும் 23 வயது சியாஃபங் என்ற இளம் பெண் அங்கு இருந்த 80 வயது லி என்ற முதியவருடன் முதலில் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு ஒரு கட்டத்தில் காதல் ஆகி கனிந்ததை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

இந்த காதலுக்கு இளம் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவர் 80 வயது முதியவரை கரம் பிடித்துள்ளார். இந்த திருமணம் முதியோர் இல்லத்தில் எளிமையாக நடந்ததாகவும் முதியோர் இல்லத்தில் இருந்த நிர்வாகிகள் மற்றும் முதியவர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வது போல் 80 வயது முதியோரை காதலித்து 23 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!