Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான் கட்சியிலிருந்து எவனாவது இங்க வந்தா உதைதான்! – மன்சூர் அலிகான் வார்னிங்!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (11:49 IST)
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி புதுக்கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான் சீமான் கட்சியினர் தனது கட்சியில் சேரக்கூடாது என கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த மன்சூர் அலிகான் அக்கட்சியிலிருந்து விலகி ”தமிழ் தேசிய புலிகள் கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழரில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ள மன்சூர் அலிகான், சட்டமன்ற தேர்தலில் தனக்கு சீமான் தொகுதி ஒதுக்காதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். தான் தனிக்கட்சி தொடங்கினாலும் அதை நாம் தமிழருக்கு எதிராக தொடங்கவில்லை என்றும், சீமானுடன் நட்புறவு தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாம் தமிழர் கட்சியிலிருந்து யாராவது தன் கட்சியில் சேர வந்தால் உதைத்து விரட்டிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments