Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியால் போன பதவி – ஓபிஎஸ்-ஐ சந்தித்த மணிகண்டன் !

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (08:55 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் நேற்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மணிகண்டன் துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்தித்துள்ளார்.

தகவல் தொழ்ல்நுட்ப துறை அமைச்சராக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் மணிகண்டனிடம் இருந்து அந்த பொறுப்புகள் பிடுங்கப்பட்டு கூடுதல் பொறுப்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை நேற்றிரவு ஆளுநர் அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு முதல்முறையாக அமைச்சரவையில் ஒரு மாற்றத்தை செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. உடுமலை ராதாகிருஷ்ணன் தனியாக ஒரு லட்சம் கேபிள் இணைப்புகளைக் கொண்டுள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது சர்ச்சைகளைக் கிளப்பியது.

இதையடுத்து நேற்று மதுரையில் இருந்து சென்னைக்குக் கிளம்பிய மணிகண்டன் முதல்வரை சந்திக்கப்போவதில்லை எனக் கூறினார். சென்னை வந்தவுடன் முதல் ஆளாக சென்று துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்தித்துள்ளார். இருவருக்குமான சந்திப்பு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை நடந்ததாகத் தெரிகிறது. மணிகண்டன் சொல்லிய அனைத்துப் புகார்களையும் கேட்டுக்கொண்ட ஓபிஎஸ் அவருக்கு ஆதரவாக எந்த பதிலையும் சொல்லாததால் மணிகண்டன் அதிருப்தி அடைந்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு உலாவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments