தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னை பெண்கள் விடுதியில் பரபரப்பு..!

Siva
ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (09:32 IST)
சென்னையின் வேளச்சேரி பகுதியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சம்பவம் நடந்த அன்று இரவு நேரத்தில், வேளச்சேரியில் உள்ள தனியார் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த அந்த இளைஞர், அறையில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் அலறியதால், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்தவர் வேளச்சேரி பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பது தெரிய வந்தது.
 
காவல்துறையினர் லட்சுமணனை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் இதேபோன்று வேறு பல பெண்கள் விடுதிகளிலும் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுயசார்புடன் தீபாவளியை பெருமிதமாக கொண்டாடுவோம்! - நாட்டு மக்களுக்கு பிரதமர் தீபாவளி வாழ்த்து!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 விரைவில்..? பாகிஸ்தானை பீதியில் ஆழ்த்திய இந்திய ராணுவம்!

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்