யுடியூப் பார்த்து கள்ள நோட்டு அடித்த நபர் – சென்னையில் கைது!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (09:41 IST)
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த இலியாஸ் என்ற நபர் கள்ளநோட்டு அடித்து அதைக் கடைகளில் மாற்றும்போது சிக்கியுள்ளார்.

சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள கடை ஒன்றில் நபர் ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பொருட்கள் வாங்கியுள்ளார். அந்த நோட்டு சந்தேகப்படும் படியாக இருந்ததால் போலிஸாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த நோட்டுகளை சோதனை நடத்தியதில் அது கள்ளநோட்டு என்பது உறுதியாகியுள்ளது.

அதையடுத்து சிசிடிவி கேமராக் காட்சிகளை வைத்து அந்த நபரை தேடியதில் அவர் புளியந்தோப்பை சேர்ந்த இலியாஸ் என்பது தெரியவந்துள்ளது. யூடியூபைப் பார்த்து கள்ள நோட்டு அடிக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறான்.இதற்கு முன்னதாகவே 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து மாட்டிக்கொண்ட நிலையில் இப்போது 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணியா? இல்லை தேசிய ஜனநாயக கூட்டணியா?!.. முகத்தை இழக்கிறதா அதிமுக?!..

234 தொகுதிகளிலும் பிரச்சாரம் ஸ்டார்ட்!.. அதிரடியாக களமிறங்கிய திமுக!...

விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்காவிட்டால் காங்கிரஸ் உடையும்: அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்?!.. பாஜக மூவ்!.. அரசியலில் அதிரடி திருப்பம்!..

கடைசி வரை சஸ்பென்ஸ் வைத்திருக்கும் ராமதாஸ் - பிரேமலதா.. எந்த கூட்டணியில் இணைவார்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments