யுடியூப் பார்த்து கள்ள நோட்டு அடித்த நபர் – சென்னையில் கைது!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (09:41 IST)
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த இலியாஸ் என்ற நபர் கள்ளநோட்டு அடித்து அதைக் கடைகளில் மாற்றும்போது சிக்கியுள்ளார்.

சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள கடை ஒன்றில் நபர் ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பொருட்கள் வாங்கியுள்ளார். அந்த நோட்டு சந்தேகப்படும் படியாக இருந்ததால் போலிஸாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த நோட்டுகளை சோதனை நடத்தியதில் அது கள்ளநோட்டு என்பது உறுதியாகியுள்ளது.

அதையடுத்து சிசிடிவி கேமராக் காட்சிகளை வைத்து அந்த நபரை தேடியதில் அவர் புளியந்தோப்பை சேர்ந்த இலியாஸ் என்பது தெரியவந்துள்ளது. யூடியூபைப் பார்த்து கள்ள நோட்டு அடிக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறான்.இதற்கு முன்னதாகவே 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து மாட்டிக்கொண்ட நிலையில் இப்போது 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments