Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் 14ஆம் தேதி மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (08:00 IST)
வரும் 14ஆம் தேதி மகாளய அமாவாசை தினம் என்பதால் அன்றைய தினம் ராமேஸ்வரம் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மகாளய மகாளய அமாவாசை தினத்தில் ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வுகள் நடைபெறும். அன்றைய தினம் ஏராளமானோர் ராமேஸ்வரத்தில் குவிந்து வருவார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டு மகாளய அமாவாசை வரும் 14ஆம் தேதி வர இருக்கும் நிலையில் 13ஆம் தேதி சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதேபோல் மதுரை, கோவை, பெங்களூரு உள்பட முக்கிய இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும்  போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.  

அதேபோல் 14ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments