Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா! – மதுரையில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (11:31 IST)
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மதுரை மருத்துவ கல்லூரி மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் காரணமாக பள்ளிகள் 9 முதல் 12 வகுப்புகளுக்கு திறக்கப்பட்டுள்ளன. அதேபோல தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மதுரை மருத்துவ கல்லூரியில் படித்து வரும் 5 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சமீப காலமாக மாணவ, மாணவியர் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments