Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பார்ட்னர்ஷிப் முக்கியம்… அது நடக்கவில்லை – கோலி வேதனை!

Advertiesment
பார்ட்னர்ஷிப் முக்கியம்… அது நடக்கவில்லை – கோலி வேதனை!
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:34 IST)
நேற்றைய போட்டியில் ஆர் சிபி அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் வருண் சக்கரவர்த்தியின் அபார பந்து வீச்சு காரணமாக பெங்களூரு அணி படுதோல்வி அடைந்தது. வருண்  சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் அது மட்டுமின்றி அவர் வீசிய 24 பந்துகளில் 15 டாட் பந்துகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது

போட்டி முடிந்த பின்னர் பேசிய ஆர் சி பி கேப்டன் கோலி ‘ ஆரம்பத்திலேயே பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. பார்ட்னர்ஷிப் முக்கியம், 42 ரன்களுக்குப் பிறகு 20 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்துவிட்டோம். சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள ஒரு போட்டி தேவைப்படும். ஆனால் அந்த ஒரு போட்டி இரண்டாக மாறிவிடக் கூடாது. அடுத்த போட்டியிலிருந்து வெற்றி பெறுவதற்கான அணி எங்களிடம் உள்ளது. வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணியில் வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைக்கும்: விராத் கோஹ்லி