Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ நோய்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Siva
வியாழன், 3 ஏப்ரல் 2025 (08:11 IST)
மெட்ராஸ் எனப்படும் கண் தொற்று நோய் அவ்வப்போது பொதுமக்களை பாதித்து வரும் நிலையில், தற்போது மெட்ராஸ் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
 
சமீப காலமாக மெட்ராஸ் தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், மெட்ராஸ் எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒரு சாதாரண நோய் என்றாலும், அதை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும், காலம் தாழ்த்தினால் பார்வையில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கண் எரிச்சல், வெளிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்ணில் இருந்து நீர் வந்து கொண்டே இருப்பது, இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் ஆகியவை மெட்ராஸ் பாதிப்பின் அறிகுறிகள் என்றும், இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
கடந்த சில வாரங்களாக தினமும் ஐந்து பேருக்கு மெட்ராஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ள மருத்துவர்கள், அவர்களில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments