Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து செல்கிறார் பிரதமர் மோடி.. பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பு..!

Siva
வியாழன், 3 ஏப்ரல் 2025 (08:08 IST)
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக இன்று தாய்லாந்து செல்ல இருப்பதாகவும், அங்கு நடைபெறும் ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தாய்லாந்து பிரதமருடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
வங்காள விரிகுடாவையொட்டிய இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளை ஒருங்கிணைத்து பிம்ஸ்டெக் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஆறாவது மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தாய்லாந்து செல்கிறார்.
 
அவருக்கு தாய்லாந்தில் உள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். தாய்லாந்து அரசு மாளிகையில் இந்திய, தாய்லாந்து பிரதமர்களின் சந்திப்பு நடைபெறும் என்றும், அப்போது பல முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
 
சமீபத்தில் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு முதல் உதவி செய்த நாடாக இந்தியா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments