Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து செல்கிறார் பிரதமர் மோடி.. பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பு..!

Siva
வியாழன், 3 ஏப்ரல் 2025 (08:08 IST)
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக இன்று தாய்லாந்து செல்ல இருப்பதாகவும், அங்கு நடைபெறும் ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தாய்லாந்து பிரதமருடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
வங்காள விரிகுடாவையொட்டிய இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளை ஒருங்கிணைத்து பிம்ஸ்டெக் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஆறாவது மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தாய்லாந்து செல்கிறார்.
 
அவருக்கு தாய்லாந்தில் உள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். தாய்லாந்து அரசு மாளிகையில் இந்திய, தாய்லாந்து பிரதமர்களின் சந்திப்பு நடைபெறும் என்றும், அப்போது பல முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
 
சமீபத்தில் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு முதல் உதவி செய்த நாடாக இந்தியா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments