Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவமழையால் தள்ளிப்போகிறதா உள்ளாட்சித் தேர்தல் ?

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (09:06 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்துள்ளதால் நவம்பரில் நடக்க இருந்த உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.  இதனால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன. இது தொடர்பான வழக்குகளில் தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவித்துவிடுவோம் எனத் தெரிவித்திருந்தது.

இதனால் நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக தமிழக தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப் பெட்டிகள் கேட்டு கடிதம் எழுதியது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைப் பெய்து வருவதால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments