Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு நேரங்களில் சாலைகளில் நடமாடும் சிறுத்தை.. பொதுமக்கள் உஷார்

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (13:38 IST)
வால்பாறை சாலைகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை-பொள்ளாட்சி சாலைகளில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அப்பகுதியிலுள்ள மக்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை, வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை எஸ்டேட் சாலையில் தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை நீண்ட நேரம் அமர்ந்திருந்து பின் சாலையை கடந்துள்ளது. அதனை அந்த சாலையின் வழியாக வாகனத்தில் வந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் சாலைகளில் தொடர்ந்து காணப்படுவதால் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி, சிறுத்தையை புகைப்படம் எடுக்க கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அப்பகுதியிலுள்ள பொது மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments