Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2.. இஸ்ரோ உறுதி

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (12:36 IST)
சந்திராயன் 2 விண்கலம் நாளை விண்ணில் பாய்வது உறுதி என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவினை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம், கடந்த 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நிறுத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோளாறுகளை சரிசெய்த நிலையில் நாளை சந்திராயன் 2 வின்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ உறுதி அளித்துள்ளது.

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோவின் தலைவர் கைலாசவடிவு சிவன், நாளை பிற்பகல் 2.43 மணிக்கு உறுதியாக சந்திராயன் 2 விண்கலம், ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட்டின் மூலம் ஏவப்படும் எனவும், இனி எந்த தொழில்நுட்ப கோளாறும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் கூறினார். மேலும் சந்திராயன் விண்ணில் ஏவப்படுவதற்கான கவுண்டவுன் இன்று மாலை 6.40 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments