Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2.. இஸ்ரோ உறுதி

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (12:36 IST)
சந்திராயன் 2 விண்கலம் நாளை விண்ணில் பாய்வது உறுதி என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவினை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம், கடந்த 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நிறுத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோளாறுகளை சரிசெய்த நிலையில் நாளை சந்திராயன் 2 வின்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ உறுதி அளித்துள்ளது.

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோவின் தலைவர் கைலாசவடிவு சிவன், நாளை பிற்பகல் 2.43 மணிக்கு உறுதியாக சந்திராயன் 2 விண்கலம், ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட்டின் மூலம் ஏவப்படும் எனவும், இனி எந்த தொழில்நுட்ப கோளாறும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் கூறினார். மேலும் சந்திராயன் விண்ணில் ஏவப்படுவதற்கான கவுண்டவுன் இன்று மாலை 6.40 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments