Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2.. இஸ்ரோ உறுதி

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (12:36 IST)
சந்திராயன் 2 விண்கலம் நாளை விண்ணில் பாய்வது உறுதி என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவினை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம், கடந்த 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நிறுத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோளாறுகளை சரிசெய்த நிலையில் நாளை சந்திராயன் 2 வின்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ உறுதி அளித்துள்ளது.

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோவின் தலைவர் கைலாசவடிவு சிவன், நாளை பிற்பகல் 2.43 மணிக்கு உறுதியாக சந்திராயன் 2 விண்கலம், ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட்டின் மூலம் ஏவப்படும் எனவும், இனி எந்த தொழில்நுட்ப கோளாறும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் கூறினார். மேலும் சந்திராயன் விண்ணில் ஏவப்படுவதற்கான கவுண்டவுன் இன்று மாலை 6.40 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments