Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்கள் தொடர் மழை... நிரம்பி வழியும் குற்றாலம்!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (11:15 IST)
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையால் கோவை குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 
கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலம், சாடியாறு கொத்தி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடைவிடாது தொடர் சாரல் மழையும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. 
 
இதனால் கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments