தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: இம்முறை அதிமுக, திமுக எம்.எல்.ஏ இல்லை!

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (06:51 IST)
தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா
தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உள்பட 19 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது
 
ஆம் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் 
 
அதிமுக திமுக எம்எல்ஏக்கள் மாறி மாறி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதன் முதலாக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும், இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 20 ஆக உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் நேற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஒரு ஆறுதல் விஷயமாக கொரோனாவில் இருந்து குணமாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments