Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்பனா குமாரியை மிஞ்சிய தமிழகத்தின் கீர்த்தனா

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (15:02 IST)
சமீபத்தில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வின் முடிவுகள் வெளிவந்தது. இந்த தேர்வில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனா குமாரி என்பவர் முதலிடம் பெற்றார். இவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தது. அதே நேரத்தில் நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா இந்திய அளவில் 12வது இடத்தை பிடித்தார்.
 
இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத்தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகியது. இந்த தேர்வையும் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த கல்பனாகுமாரியும், நீட் தேர்வில் 12ஆம் இடத்தை பிடித்த கீர்த்தனாவும் எழுதியிருந்தனர். ஜிப்மர் நுழைவுத்தேர்வில் தமிழகத்தின் கீர்த்தனா 5வது இடத்தை பிடித்துள்ளார். ஆனால் இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த கல்பனாகுமாரிக்கு 33வது இடம்தான் கிடைத்துள்ளது.
 
நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தாலும் புதுவை ஜிப்மர் வைத்த நுழைவுத்தேர்வில் 33வது இடத்தில்தான் கல்பனாகுமாரியால் வர முடிந்துள்ளது என்பது, நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் திறமையானவர் இல்லை என்பதை நிரூபித்துள்ளதாக சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments