கரூர் துயரம்: பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசிய விஜய்!

Prasanth K
செவ்வாய், 7 அக்டோபர் 2025 (11:07 IST)

கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்கள் குடும்பங்களிடம் சம்பவம் நடந்து 10 நாட்கள் கழித்து வீடியோ காலில் பேசியுள்ளார் விஜய்.

 

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக பிரச்சாரக் கூட்டம் நடந்த நிலையில் அதில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜய் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்ட நிலையில், வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதுடன், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்..

 

ஆனால் இந்த சம்பவம் நடந்து இன்றோடு 10 நாட்களாகிவிட்ட நிலையில் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி வந்தட்து, இந்நிலையில் கூட்டநெரிசலில் பலியான தனுஷ்குமார் என்பவரின் குடும்பத்திடம் வீடியோ கால் மூலமாக விஜய் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவரின் தங்கையிடம் பேசிய விஜய் தான் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து அனைத்தையும் செய்து தருவதாக ஆறுதல் கூறியுள்ளார். 

 

சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வீடியோ காலில் பேசிய விஜய் அதை யாரும் புகைப்படமோ, வீடியோவோ எடுக்க வேண்டாம் என கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேபாளத்தில் மீண்டும் Gen Z இளைஞர்கள் போராட்டம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. கடைசி நேரத்தில் டிரம்புக்கு பரிந்துரை செய்த உக்ரைன் அதிபர்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: தவெகவின் இன்னொரு மாவட்ட செயலாளர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments