Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சயன கோலத்தில் நாகங்கள் பாதுகாக்க குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்!

Webdunia
சனி, 17 ஆகஸ்ட் 2019 (11:56 IST)
இன்று மாலை குளத்திற்குள் வைக்கப்படுகிறார் அத்திவரதர் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா பேட்டி

 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அவரை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.  
 
ஜூலை 31 ஆம் தேதி வரை சயனகோலத்தில் காட்சித் தந்த அத்திவரதர், ஆகஸ்து 1 ஆம் தேதியிலிருந்து நின்ற கோலத்தில் காட்சித் தந்து வருகிறார். இன்று அத்திவரதர் மீண்டும் குளத்திற்குள் செல்கிறார். 
இத்தோடு இன்னும் 40 வருடங்கள் கழித்து 2059 ஆம் ஆண்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் அத்திவரதர். இந்நிலையில் இன்று மாலை குளத்திற்குள் வைக்கப்படுகிறார் அத்திவரதர் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பேட்டியளித்துள்ளார். 
 
எனவே, இன்று அதிகாலை முதலே அத்திவரதருக்கான பரிகார பூஜைகள் துவங்கியது. மேலும், சிலைக்கு அடுத்த 40 ஆண்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தைலங்கள் பூசப்பட்டு குளத்தில் வைக்கப்பட்டு பின்னர் நீர் நிரப்பப்படுமாம். 
 
சயன கோலத்தில் குளத்திற்குள் செல்லும் அத்திவரதரின் தலை பகுதியில் 5 தலை நாகத்தின் சிலை வைக்கப்படுகிறது. அவரை சுற்றி 16 ஐந்து தலை நாகங்கள் காவல் காக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தங்கம் விலை உயர்ந்ததற்கு பிரதமர் மோடி தான் காரணம்.. சித்தராமையா

இம்ரான்கான் சகோதரிகள் மூவர் அதிரடி கைது.. என்ன காரணம்?

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் செல்லும் ராகுல் காந்தி.. என்ன காரணம்?

ஜனாதிபதிக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு.. அவசர சட்டம் கொண்டு வருகிறதா மத்திய அரசு?

அடுத்த கட்டுரையில்
Show comments