Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்லா வெள்ளாட்டு கறியா வெச்சாங்க பாரு..! – ஆண்கள் மட்டும் நடத்தும் கறி விருந்து!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (10:58 IST)
கமுதியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று நடத்தும் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவின் சிறப்பே ஆண்கள் மட்டுமே இந்த திருவிழாவை நடத்துவதுதான். முந்தைய காலத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பெண்ணாக இருந்த சமயம் சக பெண்களால் துன்புறுத்திக் கொள்ளப்பட்டதாகவும், அதனால் தனக்கு திருவிழாவை ஆண்களே நடத்த வேண்டும் என எல்லைப்பிடாரி அம்மன் கேட்டதன் பேரில் ஆண்டுதோறும் ஆண்களே இந்த திருவிழாவை கொண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்ட நிலையில் 47 கிடா ஆடுகள் வெட்டப்பட்டு அனைவருக்கும் கறிவிருந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த படையலை எடுத்து செல்லக் கூடாது என்பதால் மீத படையலை குழி தோண்டி புதைத்துள்ளார்கள். இதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அசைவ பிரியர்கள் பலர் இதுகுறித்து சுவாரஸ்யமாக பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

அமெரிக்காவிலிருந்து வந்த மூன்றாவது விமானம்.. இதிலும் பயணிகளுக்கு விலங்கிடப்பட்டதா?

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments