Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ் கட்டண உயர்வு குறித்து 4 நாள் கழித்து கருத்து கூறிய கமல்

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (22:25 IST)
கடந்த 20ஆம் தேதி தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நான்கு நாட்கள் கழித்து திடீரென ஞானோதயம் பிறந்தது போல் நடிகர் கமல்ஹாசன் வழக்கம்போல் டுவிட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே! என்று கூறியுள்ளார்

மக்களின் பிரச்சனை ஒன்றுக்காக இவ்வளவு காலதாமதம் செய்து கமல் குரல் கொடுப்பதற்கு பதிலாக ரஜினி மாதிரி அமைதியாக இருந்திருக்கலாமே என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments