Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளில்லாத அமேசான் சூப்பர் மார்க்கெட்: ப்ளான் என்ன??

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (20:25 IST)
அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை சியாட்டில் நகரில் அறிமுகம் செய்துள்ளது. ஒரு ஆண்டு காலமாக இந்த திட்டத்திற்கான சோதனை நடைபெற்று வந்தது. 
 
சூப்பர் மார்க்கெட்டில் பணியாளர்கள் இல்லாமல், பில் போட வரிசையில் நிற்காமல் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க இந்த திட்டத்தில் அமேசான் வழிவகுத்துள்ளது. மேலும், சூப்பர் மார்க்கெட் முழுவதும் கேமரா மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. 
 
இந்த கேமராக்கள் மற்றும் சென்சார்கள் வாடிக்கையாளரை அடையாளம் கண்டுகொண்ள்ளவும், வாங்கும் பொருட்கள் என்ன, திரும்ப வைக்கும் பொருட்கள் என்ன என்பதை பதிவு செய்யவும் பயன்படுகிறது. 
 
அதேபோல், வாடிக்கையாளர்கள் வெளியே செல்லும் போது வாங்கிய பொருட்களுக்கான தொகை கணக்கிடப்பட்டு அவர்களின் கிரெடிட் கார்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். அமேசான் கோ சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்வதற்கு முன்னர் அமேசான் கோ என்ற செயலி மூலம் வாடிக்கையாளர்கள் கியூ ஆர் குறியீடை ஸ்கேன் செய்வது அவசியம்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments