Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவாரணம் என போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது.. எண்ணூரில் ஆய்வு செய்த கமல்ஹாசன்

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (10:24 IST)
நிவாரணம் என போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது என எண்ணூர் காட்டுகுப்பம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு செய்தார்.

எண்ணூரில் எண்ணெய் கசிவுகள் நடந்த இடத்தில் படகில் சென்று பார்வையிட்ட கமல்ஹாசன் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘இங்கு நான் பலமுறை வந்துள்ளேன், நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்.

இங்குள்ள கழிவுகளை அகற்ற டெக்னீசியன்கள் இல்லை. மீனவர்களே கழிவுகளை அகற்றி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் இதுபோல நடக்கும் போது நிவாரணம் என போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது. எண்ணெய் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் பேட்டி அளித்தார்.

எண்ணெய் கழிவை சுத்தம் செய்ய வேண்டியது மீனவர்கள் அல்ல, அதற்கு டெக்னீசியன்கள் தேவை, இயற்கை என கூறி தப்பிக்க முடியாது. ஏழு வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை தான் இன்றும் உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. திருச்சியில் 4 பேர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

இன்று முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு.. தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு..!

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments