Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் வேதா இல்லம் குறித்து தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

Webdunia
புதன், 6 மே 2020 (08:17 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவருடைய நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வேண்டுகோளை அடுத்து இதற்கான பணிகளை அரசு செய்து வந்தது. 
 
இந்த நிலையில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணியில் தமிழக அரசு தற்போது தீவிரம் காட்டியுள்ளது. முன்னால் முதல்வர் ஜெயலலிதா இடத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
 
போயஸ் கார்டன் பகுதி மக்களின் கருத்தை கேட்டறிந்த நிலையில் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் இடத்தை கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் என்பதும், ‘வேதா இல்லமானது எங்களது பூர்வீக சொத்து என்றும், இதனை வாங்கவோ, விற்கவோ யாருக்கும் உரிமை கிடையாது என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வேதா இல்லத்தை தமிழக அரசு கையகப்படுத்துவதை டிடிவி தினகரனும் எதிர்த்தார் என்பது தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments