Publish Date: Fri, 24 Apr 2020 (21:24 IST)
Updated Date: Fri, 24 Apr 2020 (21:27 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் 72 பேர்கள் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 1755 பேர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவை குனியமுத்தூரில் கொரோனா விழிப்புணர்வுகாக போலீஸார் எம்.ஜி.ஆர்ஜெயலலிதா வேடம் அணிந்து நடித்த காட்சி மக்கள் அனைவரையும் கவர்ந்தது.
சமூக விலகலுடன் மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர்.