Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வங்கிக்கணக்குகள் முடக்கம்..!

Mahendran
சனி, 2 மார்ச் 2024 (15:59 IST)
திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர் போதை மருந்து கடத்தலில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில் அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சமீபத்தில் டெல்லியில் போதை மருந்து பிடிபட்டது என்பதும், அதன் காரணமாக மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் தான் இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என்பது தெரிய வந்தது. 
 
இந்த நிலையில் ஜாபர் சாதிக் திடீரென குடும்பத்துடன் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரது வீட்டை சோதனை செய்த காவல்துறையினர் வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். 
 
இந்த நிலையில் தற்போது ஜாபர் சாதிக் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments