Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தேகத்தால் மனைவியை கடப்பாரையால் குத்திக் கொன்ற கணவன் கைது

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (09:47 IST)
சேலத்தில் கணவன் மனைவிக்கிடையே நடந்த பிரச்சனையில், கணவன் மனைவியை கடப்பாரையால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(53), இவரது மனைவி வள்ளி(45). விசைத்தறி உரிமையாளரான இவர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இவர்களின் சண்டை முற்றவே ஆத்திரமடைந்த மாரிமுத்து அவரது மனைவியை கடப்பாரையால் குத்திக்கொன்றார். பின்னர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். மனைவி தன்னை கொள்ள முயற்சித்ததால் அவரிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே அவரைக் கொன்றதாக போலீஸாரிடம் மாரிமுத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments