Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண் வேடத்தில் நடித்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (09:07 IST)
ஆந்திராவில் பெண் ஒருவர் ஆணைப் போல் வேஷமிட்டு, மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் ஈடுகலபாடு கிராமத்தை சேர்ந்த பெண் ரமாதேவி(18). இவர் ஆண்களை போல் வேஷமிட்டு, தற்பொழுது வரை மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே வெளியூரில் வேலை இருக்கிறது என கூறிவிட்டு ஓடிவிடுவார் 
 
சமீபத்தில் மூன்றாவதாக மோனிகா என்ற இளம் பெண்ணை  திருமணம் செய்துகொண்டார். மோனிகாவிற்கு ரமாதேவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே இதுகுறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மோனிகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ரமாதேவியை போலீஸார் கைது செய்தனர். ரமாதேவி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது பணத்திற்காகவா? அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவா? என்கிற கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்