Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா வழக்கு: அப்பல்லோ மருத்துவமனைக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (12:59 IST)
ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்க கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கில் ரத்த மாதிரி கேட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
பெங்களூரை சேர்ந்த அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
ஆனால் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அவரது மனுவை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டில்  உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில்  அம்ருதா மனு தாக்கல் செய்தார். அப்போது ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்தால் என்ன நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
 
இந்நிலையில் இன்று வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜெயலலிதாவின் ரத்த மாதிரி உள்ளதா என மார்ச் 7ஆம் தேதிக்குள் பதிலளிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

இரவில் பகலை காட்டிய அதிசயமான விண்கல்! வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்! – வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments