இன்றும், நாளையும் வெளுக்கப் போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

Prasanth Karthick
திங்கள், 5 மே 2025 (13:50 IST)

தமிழ்நாட்டில் கோடை வெயில் நிலவி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும், நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கோடைக்காலம் நிலவி வரும் நிலையில் பல பகுதிகளிலும் வெயிலின் உஷ்ணம் 100 டிகிரியை தாண்டியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது. அக்கினி வெயிலின் தொடக்க காலம் என சொல்லப்பட்ட நேற்று முதலாகவே மழை தொடர்கிறது.

 

இந்நிலையில் இன்றும், நாளையும் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

அதுபோல நாளை கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மலைப்பாங்கான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு கனமழை அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments