Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதாரத்தை சீர்குலைத்த குற்றவாளி ப சிதம்பரம் தான்..ஹெச்.ராஜா ஆவேசம்

Arun Prasath
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (12:40 IST)
பொருளாதாரத்தை சீர்குலைத்த முதல் குற்றவாளி ப சிதம்பரம் தான் என ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

பொருளாதார மந்தநிலை குறித்து பாஜகவையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, ஊழலில் ஈடுபட்ட ப சிதம்பரத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசியிருப்பது வேதனையளிக்கிறது, மேலும் நாட்டில் உள்ள வங்கிகளையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்த முதல் குற்றவாளி ப சிதம்பரம் தான் என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இத்தனை வருடங்கள், வங்கி பணத்தை சூறையாடியது காங்கிரஸ் கட்சிதான் எனவும் ஆவேசமாக பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் மீது ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு, ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு ஆகிய வழக்குகள் பதியப்பட்டன. இதில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் சிபிஐ அதிகாரிகளால் சிறை வைக்கப்பட்டு, பின்பு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்திலும் ப சிதம்பரம் தாக்கல் செயத ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments