Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

ஒரே வாரத்தில் 16 பேர் குண்டர் சட்டத்தில் கைது.. சென்னையில் பரபரப்பு..!

Advertiesment
Arrest

Siva

, செவ்வாய், 30 ஜூலை 2024 (09:47 IST)
சென்னையில் ஒரே வாரத்தில் 16 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னையில் குற்றங்களை குறைக்கும் வகையில் காவல்துறை கடந்த சில நாட்களாக அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் ஜனவரி மாதம் தொடங்கி இன்று வரை குண்டர் சட்டத்தின் சட்டத்தின் கீழ் 796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

கொலை, கொள்ளை, அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 422 பேர்,  திருட்டு வழிப்பறி பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 130 பேர்,  கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்த 178 பேர்,  போதை பார்த்து விற்பனை செய்த 29 பேர்,  பாலியல் தொழில் செய்த 16 பேர்,  பெண்களை பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய ஐந்து பேர்,  சைபர் குற்றத்தில் ஈடுபட்ட ஐந்து பேர்,  சட்டவிரோதமாக மதுபானம் பெற்ற வகையில் ஏழு பேர் என மொத்தம் 7296 பேர் குண்டர் சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக குண்டர் சட்டத்தில் கடந்த 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஒரே வாரத்தில் 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிலச்சரிவு பகுதிக்கு காங்கிரஸ் சென்று தொண்டர்கள் உதவி செய்யுங்கள்: ராகுல் காந்தி வலியுறுத்தல்