Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஸ்கோத் அல்வாவிலிருந்து பீமபுஷ்டி அல்வாவாக மாறிய ஆளுநர் உரை!

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (18:50 IST)
இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனையடுத்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்தது.
 
இந்நிலையில் ஆளுநரின் உரை குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆளுனர் உரையை வழக்கமாக மாநில அரசு தயாரித்து வழங்கும். ஆனால் இந்த உரையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை பாராட்டியிருப்பதைப் பார்க்கையில், மத்திய அரசு தயாரித்த அறிக்கையோ என தோன்றுகிறது. மொத்தத்தில் ஆளுனர் உரை மஸ்கோத் அல்வா போன்று உள்ளது என கூறினார்.
 
இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் ஆளுநர் உரை மீதான இந்த மஸ்கோத் அல்வா விமர்சனத்துக்கு அதிமுக எம்எல்ஏவான ராஜன் செல்லப்பா பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஆளுநர் உரை என்பது மஸ்கோத் அல்வா இல்லை, மக்களுக்கு பயன்பெறும் திட்டங்களை கொண்ட பீமபுஷ்டி அல்வா என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments