சுமார் 3000 உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்கம் தங்களுக்குள் நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுண்டு. இந்த தேர்தலால் பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. நடிகர், நடிகையரகளுக்கு நல்லது செய்வதாக சொல்லியே இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஆனால் இந்த தேர்தலை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இணையாக ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன. மக்களின் பிரச்சனைகளுக்காக ஒருமுறை கூட முதல்வரையோ, கவர்னரையோ சந்திக்காத விஷால், நடிகர் சங்கத்தின் பிரச்சனைக்கு மட்டும் நேற்று கவர்னரை சந்தித்துள்ளார். அதேபோல் ஐசரிகணேஷ் அணியினரும் இன்று கவர்னரை சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் நேற்று பதிவாளரால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'நடிகர் சங்கம் என்பது ஒரு அமைப்பு, அவர்களின் தேர்தலில் அரசு தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும், பூச்சி முருகன் தான் இதை வைத்து அரசியல் செய்வதாகவும் தெரிவித்தார்.
நடிகர் சங்க தேர்தலை நல்லமுறையில் நடத்தி தர வேண்டியது அரசின் கடமை என்று கருணாஸ் கூறியுள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலில் அரசு தலையிடாது என்று அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!