Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் கொடுக்க வந்த கேரளா – தடுத்து நிறுத்திய தமிழகம்

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (20:29 IST)
தமிழ்நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினையில் மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவ கேரள அரசு முன்வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சரியான அளவு மழை பெய்யாததுதான் காரணம் என தமிழக முதல்வர் சொன்னாலும், நீர்நிலைகளை சரியாக பராமரிக்காததே காரணம் என பலர் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக மக்களின் தண்ணீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் 20 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில்கள் மூலம் வழங்க கேரளா அரசு முன்வந்ததாக தெரிவித்துள்ளது.

ஆனால் இப்போது எங்களுக்கு தண்ணீர் தேவையில்லை என தமிழக முதல்வர் அலுவலகம் கேரளாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

கடந்த ஆண்டு கேரளா வெள்ளத்தின் போது தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு ரயில்கள் மூலம் குடிதண்ணீர் அனுப்பப்பட்டது. அதை அவர்கள் மனமுவந்து பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments