Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் சதமடிக்க இருக்கும் சென்னை விமான நிலையம் !- எதில் தெரியுமா?

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (13:06 IST)
சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை கண்ணாடி விழுந்துள்ளது பயணிகள் மத்தியில் மீண்டும் பீதியைக் கிளப்பியுள்ளது.

சென்னையில் உள்ள விமானநிலையம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களைக் கொண்டுள்ளது. இது சமீபத்தில் 2200 கோடி ரூபாயில் நவீன மயமாக்கப்பட்டது. இதனால் மேற்கூரைகளிலும் பக்கசுவர்களிலும் கண்ணாடிகள் அமைக்கப்பட்டு பார்ப்பவர்கள் கண்ணைப் பறித்தது.

ஆனால் இந்த் கண்ணாடிகளால் வேறு சில பிரச்ச்னைகள் உண்டாக ஆரம்பித்தன. அடிக்கடி மேற்கூரைகளில் இருந்து கண்ணாடிகள் உடைந்து விழ ஆரம்பித்தன. இதனால் பயணிகள் மத்தியில் பீதி எழுந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் இதுபோன்ற சம்பவம் ஒன்று மீண்டும் நடந்துள்ளது. உள் நாட்டு முனையம் புறப்பாடு பகுதி 3-வது நுழைவு வாயிலின் மேல்பகுதியில் இருந்த கண்ணாடி திடீரென்று பெயர்ந்து கீழே விழுந்து உடைந்தது. அந்த இடத்தில் பயணிகள் உட்பட யாரும் இல்லாததால், அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. 83-வது முறையாக இந்த விபத்து நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த எண்ணிக்கை 100 –ஐத் தொடும் என சமூக வலைதளங்களில் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை இதுபோல நடந்த அசம்பாவிதங்களால் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments