Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை – அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (09:24 IST)
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.


இலவசங்கள் தருவதை நிறுத்த வேண்டும் என உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்தியா போன்ற ஒரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

மக்கள் நலத் திட்டங்களுக்கும் இலவசங்களுக்கு வேறுபாடு உள்ளது என்றும் அரசு வழங்கும் இலவசம் சில நேரத்தில் ஏழைகளுக்கு முக்கிய அம்சங்களாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது அமைச்சர் காந்தி, பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், 2022-23 நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் இருந்து ரூ.487.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுடிதோறும் விலையில்லா சீருடை திட்டத்திற்கான உற்பத்தி நிறைவடைந்தவுடன் வேட்டி, சேலை திட்டப்பணிகள் தொடரும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments