Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீதிகேட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: ஓபிஎஸ் பேட்டி

ops
, புதன், 10 ஆகஸ்ட் 2022 (21:54 IST)
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது குறித்து நீதி கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
 
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக சமீபத்தில் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார் 
இருப்பினும் தனது அணிதான் உண்மையான அதிமுக என்று ஓபிஎஸ் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து நீதி கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்
 
மேலும் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தனக்கு இன்னும் ஆதரவாக இருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கு ரத்து: நீதிமன்றம் உத்தரவு