Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்!

Advertiesment
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்!
, வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (14:05 IST)
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்.


தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழக மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என   தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனிதர்கள் இறப்பது ஏன்?