Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பொன்முடி இல்லத்தில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்சி? பரபரப்பு தகவல்..!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (16:36 IST)
அமைச்சர் பொன்முடி வீட்டில் கட்டு கட்டாக வெளிநாட்டு கரன்சி சிக்கியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 
 
பொன்முடி மகன் வீட்டிலும் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் 70 லட்சம் அளவுக்கு கணக்கில் காட்டப்படாத இந்திய கரன்சியும் 10 லட்ச ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு கரன்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாகத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்து உள்ளது.  
 
இதுகுறித்து அமலாக்கத்துறை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில முக்கிய ஆவணங்கள் பொன்முடி வீட்டில் சிக்கியதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments