Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு முழுவதும் போராட்டம்; ஒரு வழியாக கட்டுக்குள் வந்த தீ!!

Webdunia
ஞாயிறு, 1 மார்ச் 2020 (12:07 IST)
3 ரசாயன கிடங்குகளில் பிடித்த தீக் கட்டுக்குள் வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தீயை அணைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த தீயை அணைக்க முடியாமல் இரண்டாவது நாளாக இன்றும் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
 
இந்த பணியில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ரசாயணக் கிடங்குக்கு அருகில் பெட்ரோல் பங்க் வேறு இருப்பதால் தீ மேலும் பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.
 
3 ரசாயன கிடங்குகளில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் இரவு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட நிலையில், தீக் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும், முழுமையாக தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments